செய்திகள்
சத்தியமங்கலம் அருகே விபத்து - என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
சத்தியமங்கலம் அருகே பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியாகினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஏழூர் மேடு பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் (வயது 24), ஸ்ரீதர் (18) இவர்கள் எலக்ட்ரீசியன் வேலை பார்த்தனர். இவர்களின் நண்பர் ஸ்ரீதர் (18). இவர் டி.என்.பாளையம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்கள் 3 பேரும் நேற்று இரவு 10 மணியளவில் ஏழூரில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சக்திவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல பின்னால் 2 பேரும் உட்கார்ந்து சென்றனர்.
ஏழூர் பஸ் நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. பயணிகள் இறங்கியதும் அந்த பஸ் மீண்டும் புறப்பட்டது.
அப்போது எதிர்பாராத வகையில் பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிள் ‘டமார்’ என்ற சத்தத்துடன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல், ஸ்ரீதர் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மகேந்திரனும் பலியானார். விபத்தில் 3 இளைஞர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஏழூர் மேடு பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் (வயது 24), ஸ்ரீதர் (18) இவர்கள் எலக்ட்ரீசியன் வேலை பார்த்தனர். இவர்களின் நண்பர் ஸ்ரீதர் (18). இவர் டி.என்.பாளையம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்கள் 3 பேரும் நேற்று இரவு 10 மணியளவில் ஏழூரில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சக்திவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல பின்னால் 2 பேரும் உட்கார்ந்து சென்றனர்.
ஏழூர் பஸ் நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. பயணிகள் இறங்கியதும் அந்த பஸ் மீண்டும் புறப்பட்டது.
அப்போது எதிர்பாராத வகையில் பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிள் ‘டமார்’ என்ற சத்தத்துடன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல், ஸ்ரீதர் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மகேந்திரனும் பலியானார். விபத்தில் 3 இளைஞர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews