செய்திகள்

ஆளுங்கட்சியாக இருந்தாலும் போராடிதான் திட்டங்களை பெற வேண்டியது உள்ளது: தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ

Published On 2018-02-13 19:04 IST   |   Update On 2018-02-13 19:04:00 IST
ஆளும் கட்சியாக இருந்தாலும் திட்டங்களை பெற போராட வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது மாவட்ட நிர்வாகிகளையும் ஆட்சியையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நாம் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து கொடுத்து உள்ளார். கேட்காமலேயே கொடுப்பவர் அவர்.

ஆனால் இப்போது பெருந்துறை தொகுதியில் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாம் ஒன்று கேட்டால் அவர்கள் வேறு ஒன்று செய்கிறார்கள்.

ஆளும் கட்சியாக இருந்தாலும் திட்டங்களை பெற போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. எதிர்கட்சி போல் நம்மை பார்க்கிறார்கள்.

குறிப்பாக கொடிவேரி கூட்டுகுடிநீர் திட்டம் அரசு பள்ளிகள் தரம் உயர்வு போன்றவைகளை நாம் போராட வேண்டியது உள்ளது. தொகுதியில் நான் குறிப்பிட்ட பள்ளியை தரம் உயர்த்த வலியுறுத்தி இருந்தேன். நீண்ட நாட்களாகவே மக்கள் கோரிக்கையைத் தான் கல்வி துறையிடமும் கல்வி அமைச்சரிடமும் வலியுறுத்தி இருந்தேன். நான் கேட்டதற்கு மாறாக வேறு ஒரு பள்ளியை தரம் உயர்த்தி உள்ளனர். அப்படியானால் ஆளுங்கட்சியாக இருந்தாலும் நமக்கு என்ன மரியாதை உள்ளது என்றல்லவா கேட்க தோன்றுகிறது?

வருங்காலத்தில் இதுபோல் இல்லாமல் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் அப்போது தான் வரும் தேர்தல்களில் முழுமையான வெற்றி பெற வேண்டும். ஆளுங்கட்சியாக இருந்த போதிலும் திட்டங்களை போராடி பெற வேண்டிய சூழ்நிலை மாற வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் எல்லா தொகுதிகளையும் தனது தொகுதியாக நினைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தற்போது இங்குள்ள நிலைமையை சென்னையில் நடக்கும் தலைமை கழக கூட்டத்திலும் எடுத்துரைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews

Similar News