செய்திகள்
நலவாரிய தொழிலாளர்கள் ஆதார் எண்ணை நாளைக்குள் இணைக்க வேண்டும்: அதிகாரி தகவல்
நல வாரிய தொழிலாளர்கள் நாளைக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரவி ஜெயராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
மாநில அளவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையிலும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலும் அரசு நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அரசு நலத்திட்ட உதவிகள் தடையின்றி விரைவாக தொழிலாளர்களை சென்றடைய அனைத்து தொழிலாளர்களும் கட்டாயமாக ஆதார் எண்ணை வருகிற 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
அனைத்து தொழிலாளர்களும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டை நகலுடன், ஆதார் அட்டை நகலையும் சேர்த்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்), 46-பி, விளக்கடி கோயில் தெரு, (ரங்கசாமிகுளம் அருகில்), காஞ்சீபுரம் என்ற முகவரிக்கு கட்டாயம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 044- 27230279 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். #tamilnews
காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரவி ஜெயராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
மாநில அளவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையிலும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலும் அரசு நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அரசு நலத்திட்ட உதவிகள் தடையின்றி விரைவாக தொழிலாளர்களை சென்றடைய அனைத்து தொழிலாளர்களும் கட்டாயமாக ஆதார் எண்ணை வருகிற 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
அனைத்து தொழிலாளர்களும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டை நகலுடன், ஆதார் அட்டை நகலையும் சேர்த்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்), 46-பி, விளக்கடி கோயில் தெரு, (ரங்கசாமிகுளம் அருகில்), காஞ்சீபுரம் என்ற முகவரிக்கு கட்டாயம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 044- 27230279 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். #tamilnews