செய்திகள்

சென்னை வியாபாரியின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 7 ஆயிரம் கொள்ளை

Published On 2017-12-15 13:16 IST   |   Update On 2017-12-15 13:16:00 IST
காஞ்சீபுரத்தின் முக்கிய பகுதியான பஸ்நிலையம் அருகில் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் லேப்டாப்பை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சீபுரம்:

சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் பத்ரி நாத், நெல் வியாபாரி. இவர் நெல்லை பரிசோதனை செய்ய காரில் காஞ்சீபுரம் சென்றார்.

பஞ்சுபேட்டை பகுதியில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் நெல் பரிசோதனை முடிவை வாங்கிக் கொண்டு சென்னை வந்தார்.

காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தி சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காரில் இருந்த லேப்டாப், ரூ. 7 ஆயிரம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காரில் பணம் இருப்பதை அறிந்து மர்ம நபர்கள் பின்தொடர்ந்து துணிகர செயலில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. கைரேகை நிபுணர் கொள்ளை நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

காஞ்சீபுரத்தின் முக்கிய பகுதியான பஸ்நிலையம் அருகில் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் லேப்டாப்பை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News