செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலை தடுப்பு கம்பியில் மோதி மாணவன்-வாலிபர் பலி

Published On 2017-12-12 07:12 GMT   |   Update On 2017-12-12 07:12 GMT
மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலை தடுப்பு கம்பியில் மோதி மாணவன் மற்றும் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு டவுன் களத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் விக்ரம் (வயது 16). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (30). தொழிலாளி. நேற்று இரவு 2 பேரும் மோட்டார்சைக்கிளில் வில்லியம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

திம்மாவரம் அருகே பஸ்சை முந்தி செல்ல முயன்றனர். அப்போது வாகன சோதனைக்காக போடப்பட்டு இருந்த தடுப்பு கம்பியில் மோட்டார்சைக்கிள் வேகமாக மோதியது.

இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த விக்ரம், முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News