செய்திகள்

புதுவையிலிருந்து சீர்காழிக்கு சாராயம் கடத்தி வந்த கார் ஆற்றில் பாய்ந்தது

Published On 2017-11-17 15:08 GMT   |   Update On 2017-11-17 15:08 GMT
கடலூரில் புதுவையிலிருந்து சீர்காழிக்கு சாராயம் கடத்தி வந்த கார் ஆற்றில் பாய்ந்தது. இதில் காரை விரட்டி சென்று பிடிக்க முயன்ற 2 போலீசார் காயம் அடைந்தனர்.
கடலூர்:

புதுச்சேரியில் மது பாட்டில்கள் விலைகுறைவு மேலும் சாராயம் மற்றும் கள்ளும் விலைகுறைவு. இதனால் புதுவையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறது. இதை தடுக்க கடலூர் ஆல்பேட்டையில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை இன்ஸ்பெக்டர் மீனாள் தலைமையில் போலீசார்கள் ஸ்டாலின், சேரன், ரமேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து கடலூருக்கு வேகமாக வந்த ஒரு குவாலிஸ் காரை போலீசார் ஆல்பேட்டை சோதனை சாவடியில் நிறுத்த முயன்றனர்.

ஆனால் வந்த கார் நிற்காமல் சென்றது உடனே போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். மஞ்சக்குப்பம், பாரதிசாலை, புதுப்பாளையம் வழியாக அந்தகார் வேகமாக சென்றது அதனை விடாமல் போலீசார் விரட்டி சென்றனர்.

அப்போது அந்த காரை ஒட்டி சென்ற நபர் திடீரென்று போலீசார் ஸ்டாலின், ரமேஷ் ஆகியோர் வந்த இருசக்கர வாகனத்தை இடித்தார். இதில் 2 போலீசார் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

பின்னர் வேகமாக சென்ற கார் கடலூர் வன்னியர்பாளையம் என்ற இடத்தில் கெடிலம் ஆற்றில் பாய்ந்தது. போலீசார் அந்த காரை மடக்கிப்பிடித்தனர். காரை ஒட்டி சென்ற சீர்காழியை சேர்ந்த சண்முகம் என்பவரை கைது செய்தனர்.

மேலும் காரில் 15 கேனில் இருந்த 600 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இந்த கார் சீர்காழிக்கு சாராயம் கடத்தி சென்றது தெரியவந்தது. ஆற்றில் பாய்ந்த காரை கிரேன் மூலம் போலீசார் மீட்டனர்.
Tags:    

Similar News