செய்திகள்

வருமான வரி சோதனையால் எங்களை யாரும் மிரட்ட முடியாது: கலைச்செல்வன் எம்.எல்.ஏ.

Published On 2017-11-14 06:52 GMT   |   Update On 2017-11-14 06:52 GMT
சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தினரை குறிவைத்து நடத்தும் வருமான வரிசோதனையால் எங்களை யாரும் திரட்ட முடியாது என விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் கூறினார்.
பண்ருட்டி:

தினகரன் அணி கடலூர் மாவட்ட செயலாளரும், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கலைச்செல்வன் பண்ருட்டியில் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரை குறிவைத்து நடத்தும் வருமான வரி துறையினரின் சோதனை வன்மையாக கண்டிக்கதக்கது. நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான்கிடைக்கும்.

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தற்போது வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகளால் எங்களை மிரட்ட முடியாது. இந்த சொத்துக்கள் உழைப்பால் வந்த சொத்துக்கள்.

இந்த வருமான வரிசோதனை நடவடிக்கை யாருடைய தூண்டுதலின் பேரில் மத்திய அரசு நடத்துகிறது என்று பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வந்த பிறகு அவர்களின் முகத்திரை கிழியும்.

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நாங்கள் கழகத்தின் சார்பில் நடத்துகிறோம். ஆனால் அவர்கள் அரசு சார்பில் நடத்துகின்றனர். வருமான வரி சோதனை நடவடிக்கைகள் ஆட்சியாளரின் கையாலாகாதனத்தை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News