செய்திகள்

தினகரனின் ஆஸ்தான ஜோதிடரை புதுவைக்கு அழைத்து சென்று வருமான வரித்துறையினர் விசாரணை

Published On 2017-11-12 20:13 IST   |   Update On 2017-11-12 20:13:00 IST
வருமான வரித்துறையினர் சோதனையில் கட்டுக்கட்டாக ஆவணங்கள், சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தினகரனின் ஆஸ்தான ஜோதிடரை புதுவைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கடலூர், நவ. 12-

கடலூர் திருப்பாதிரிப் புலியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். பிரபல ஜோதிடர். பங்கு சந்தை புரோக்கர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஜோதிடர் சந்திரசேகரை தினகரன் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத் தார்.

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனின் ஆஸ்தான ஜோதிடராக சந்திரசேகர் இருந்து வந்தார். சசிகலா குடும்பத்தினருக்கு ஜோதி டம் பார்ப்பது, பல்வேறு யாகங்களை செய்வது என்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தினகரன் மற்றும் அவரது நெருக்கமான உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின் றனர்.

இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள ஜோதிடர் சந்திரசேகரின் வீட்டில் கடந்த 3 நாட்களாக வரு மானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத் தினர். அவரது வீடு மற்றும் வீட்டின் அருகில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை மேற்கொண் டனர். ஜோதிடர் சந்திரசேகர் பங்கு சந்தையில் அதிக அளவில் பணம் முதலீடு செய்துள்ளார். இந்த பணம் அவருக்கு வந் தது எப்படி?

முக்கிய அரசியல் பிர முகர்களின் பணத்தை அவர் முதலீடு செய்துள்ளாரா? என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சந்திரசேகரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி னர்.

மேலும் அவரது வீட்டை யும் அளவீடு செய்து குறிப்பு எடுத்தனர். வீட்டில் இருந்த கம்ப்யூட்டரின் மென்பொருட்களை நிபுணர்களின் உதவி யுடன் ஆய்வு செய்தனர்.

ஜோதிடர் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் பங்கு சந்தையில் கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்ட பத்திரங்கள், சி.டி.க்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். இரவு 8.30 மணிக்கு சோதனை முடிந்தது.

அதன் பின்னர் இரவு 8.40 மணிக்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் மேல் விசாரணை நடத்த ஜோதிடர் சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினரை ஒரு காரில் வருமானவரித்துறை அதிகாரிகள் புதுவைக்கு அழைத்து சென்றனர்.

புதுவையில் வைத்து அவர்களிடம் பங்குச்சந்தை முதலீடு மற்றும் சொத்து பத்திரங்கள் குறித்து வரு மானவரித்துறை அதி காரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் பல்வேறு திடுக் கிடும் தகவல்கள் கிடைத் துள்ளதாக கூறப்படுகிறது. * * * கிரீன் டீ எஸ்டேட் முன்பு திரண்டிருந்த தினகரன் ஆதரவாளர்கள். * * * ஜோதிடர் சந்திரசேகரை (வட்டமிட்டு காட்டப்பட்டவர்) வருமானவரித்துறை அதிகாரிகள் புதுவைக்கு அழைத்துச் சென்ற போது எடுத்த படம்.

Similar News