செய்திகள்
மாமல்லபுரம் பெண்ணை மணந்த பிரான்ஸ் நாட்டு வாலிபர்
தமிழகத்திற்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வாலிபர் மாமல்லபுரத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியை சேர்ந்தவர் சிவஞானம், குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகள் சத்யா. மாமல்லபுரத்தில் உள்ள கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன் சென்டரில் பணிபுரிந்து வந்தார்.
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் அடிக்கடி கம்ப்யூட்டர் சென்டருக்கு வந்தார். அப்போது சத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது சிரிப்பில் மயங்கி காதல் கொண்டார்.
பின்னர் இருவரும் இணையதளம் வழியாக பேசுவதும் வீடியோ சாட்டிங் செய்வதுமாக இருந்தனர். இந்த காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.
இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். நேற்று இரவு மாமல்லபுரத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்று இன்று காலை பூஞ்சேரியில் திருமணம் நடந்தது.
பின்னர் இருவரும் திருக்கழுகுன்றம் சார் பதிவு அலுவலகம் சென்று அரசு விதிமுறைபடி திருமண பதிவு செய்து கொள்கிறார்கள். பிரான்ஸ் நாட்டு மாப்பிள்ளை வீட்டார் தமிழ் பாரம்பரிய முறையில் சேலை-வேட்டி கட்டி திருமண மண்டபத்துக்கு வந்தது அப்பகுதி மக்களை ஆச்சர்யப்படுத்தியது.
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியை சேர்ந்தவர் சிவஞானம், குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகள் சத்யா. மாமல்லபுரத்தில் உள்ள கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன் சென்டரில் பணிபுரிந்து வந்தார்.
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் அடிக்கடி கம்ப்யூட்டர் சென்டருக்கு வந்தார். அப்போது சத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது சிரிப்பில் மயங்கி காதல் கொண்டார்.
பின்னர் இருவரும் இணையதளம் வழியாக பேசுவதும் வீடியோ சாட்டிங் செய்வதுமாக இருந்தனர். இந்த காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.
இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். நேற்று இரவு மாமல்லபுரத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்று இன்று காலை பூஞ்சேரியில் திருமணம் நடந்தது.
பின்னர் இருவரும் திருக்கழுகுன்றம் சார் பதிவு அலுவலகம் சென்று அரசு விதிமுறைபடி திருமண பதிவு செய்து கொள்கிறார்கள். பிரான்ஸ் நாட்டு மாப்பிள்ளை வீட்டார் தமிழ் பாரம்பரிய முறையில் சேலை-வேட்டி கட்டி திருமண மண்டபத்துக்கு வந்தது அப்பகுதி மக்களை ஆச்சர்யப்படுத்தியது.