செய்திகள்

ஒருதலைக்காதலில் கல்லூரி மாணவியின் முகம் பிளேடால் கிழிப்பு: வாலிபர் கைது

Published On 2017-10-23 09:48 GMT   |   Update On 2017-10-23 09:48 GMT
ஆலந்தூரில் ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவியின் முகம், கையில் பிளேடால் கிழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

ஆலந்தூர், மடுவாங்கரையைச் சேர்ந்தவர் ரோகித் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவியை ஒருதலையை காதலித்து வந்தார். இதனை மாணவி பெரிதாக எடுக்கவில்லை. வழக்கம் போல் அனைவருடனும் சகஜமாக பேசியபடி இருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரோகித்குமார் மறைத்து வைத்திருந்த பிளேடால் மாணவியின் முகம், கையில் கிழித்தார். பலத்த காயம் அடைந்த அவருக்கு தனியார் ஆஸ்பத் திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News