செய்திகள்

டெங்கு கொசு: நந்தம்பாக்கம் தனியார் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

Published On 2017-10-22 15:39 IST   |   Update On 2017-10-22 15:39:00 IST
நந்தம்பாக்கம் தனியார் பள்ளி ஒன்று சுகாதாரமின்றி டெங்கு கொசு உருவாகும் விதத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆலந்தூர்:

நந்தம்பாக்கம் பகுதியில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தனியார் பள்ளி சுகாதாரமின்றி டெங்கு கொசு உருவாகும் விதத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் குப்பைகளை முழுமையாக அகற்றும் வரை பள்ளியை திறக்க கூடாது என்றும் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி உத்தரவிட்டார். இதேபோல் அதே பகுதியில் சுகாதார மின்றி இருந்த 3 தொழிற் சாலைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News