செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேஸ் புக்கில் அவதூறு: சீர்காழி வாலிபர் கைது
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேஸ் புக்கில் அவதூறு பரப்பிய சீர்காழி வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்த சென்னைக்கு அழைத்து சென்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாராயணபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் மங்கை மடத்தில் இண்டெர்நெட் சென்டர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் குறித்து பேஸ் புக்கில் விமர்சித்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் சென்றது. இதைதொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசார் , நாராயணபுரத்துக்கு வந்து வாலிபர் சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த சென்னைக்கு அழைத்து சென்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாராயணபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் மங்கை மடத்தில் இண்டெர்நெட் சென்டர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் குறித்து பேஸ் புக்கில் விமர்சித்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் சென்றது. இதைதொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசார் , நாராயணபுரத்துக்கு வந்து வாலிபர் சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த சென்னைக்கு அழைத்து சென்றனர்.