செய்திகள்

காஞ்சீபுரத்தில் இன்று 109-வது பிறந்த நாள் விழா: அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை

Published On 2017-09-15 12:56 IST   |   Update On 2017-09-15 12:56:00 IST
அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்த நாள் விழாவையொட்டி காஞ்சீபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காஞ்சீபுரம்:

அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஞ்சீபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட கலெக்டர் பொன்னையா, மற்றும் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மரகதம் குமரவேல் எம்.பி. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வி.சோமசுந்தரம் உள்ளிட்டோர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர்சுந்தர், வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், எழிலசரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் சன்பிராண்ட் ஆறுமுகம், சிவிஎம்.அ.சேகர், சிறுவேடல் செல்வம், வி.எஸ். ராமகிருஷ்ணன் மரியாதை செலுத்தினர்.

தே.மு.தி.க. சார்பில் நகரச் செயலாளர் சாட்சி சண்முக சுந்தரம் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

காஞ்சீபுரத்தை அடுத்த கருக்குப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்குள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் பெஞ்சமின் மாலை அணிவித்து ஏழை-எளிய மக்களுக்கு இனிப்புகளும் அன்னதானமும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், அமைப்புச் செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், நிர்வாகிகள் அக்ரி நாகராஜன், அத்திவாக்கம் ரமேஷ், குண்ணவாக்கம் கிருஷ்ண மூர்த்தி, தென்னேரி வரதராஜூலு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கருத்தியல் பரப்பு செயலாளர் ராசகுமார் மாலை அணிவித்து மரியாதை தெலுத்தினார்.

Similar News