காரைக்குடி அருகே பஸ் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம்
காரைக்குடி:
ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே உள்ள குடிவாடாவைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் தமிழகத்துக்கு பஸ்சில் சுற்றுலா புறப்பட்டனர்.
இவர்கள் நேற்று ராமேசுவரம் சென்று விட்டு இரவு திருச்சிக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய மருத்துவமனை அருகில் உள்ள ராமேசுவரம்- திருச்சி ரோட்டில் பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த வேன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் ரோட்டோரமாக பஸ்சை திருப்பினார். எதிர்பாராத விதமாக பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்தது.
பஸ்சில் இருந்த அனைவரும் கூக்குரலிட்டனர். அக்கம், பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில் பெண்கள் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.