செய்திகள்

மயிலாடுதுறை அருகே இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது

Published On 2017-08-09 12:38 GMT   |   Update On 2017-08-09 12:38 GMT
மயிலாடுதுறை அருகே இளம் பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம்:

மயிலாடுதுறை அருகே உள்ள நமச்சிவாயபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மகள் வனிதா (20). மயிலாடுதுறையில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார்.

திருவிடை மருதூர் அருகே உள்ள மேல செம்மங்குடியை சேர்ந்த கேசவராஜ் மகன் பாட்ஷா என்கிற ராஜீவ்காந்தி (22). இவரும் வனிதாவும் படிக்கும் போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி தூத்துக்குடியில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் அவர் ஊருக்கு வந்து இருந்தார். அவர் வனிதாவை தொடர்பு கொண்டு திருமண ஆசை வார்த்தை கூறி மாங்குடி வயல் வெளி பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்தாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட வனிதா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்கு பதிவு செய்து வாலிபர் ராஜீவ்காந்தியை கைது செய்தார்.

Tags:    

Similar News