செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

Published On 2017-07-03 06:02 GMT   |   Update On 2017-07-03 06:02 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் விசாரணை நடத்தி வருகிறார்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செல்லம்பட்டிடை பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஜெயசீலன் (வயது25).

வீட்டின் பின் பகுதியில் எந்திரம் அமைத்து பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இங்கு அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 19). வேலை பார்த்தார்.

நேற்று இரவு எட்வின் ஜெயசீலனும், கிறிஸ்டோபரும் பைப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து இருந்தது.

இதனை தெரியாமல் 2 பேரும் அதில் கை வைத்தனர். இதில் மின்சாரம் பாய்ந்து எட்வின் ஜெயசீலனும், கிறிஸ்டோபரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இன்று காலை தான் அவர்கள் இறந்து கிடப்பது தெரிந்தது.

இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News