செய்திகள்
வனப்பகுதிகளை ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்
வனப்பகுதிகளை ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.
தாம்பரம்:
ஒவ்வொரு ஆண்டும் அகில உலக உயிர் பன்மை தினவிழா மே 22-ந்தேதி கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு விழா தாம்பரம் சேலையூர் அருகே உள்ள நன்மங்கலத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு மலைவாழ் மக்களுக்கு சிறுவன மகசூல் வருவாய் பயன் பங்கீட்டுத்தொகை ரூ.10 லட்சத்தை வழங்கினார். மேலும், 42 கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கடனுதவியும் வழங்கினார்.
இதனையடுத்து வனப்பகுதிகளை ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆள் இல்லா விமானம் மூலம் அடர்ந்த வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணி நடைபெற உள்ளது. ரூ.20 லட்சம் செலவில் ஓசூர், கோவை, நீலகிரி, கொடைக்கானல், மதுரை பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் கண்காணிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் சிறுத்தை மற்றும் புலிகள் காடுகளில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வருவதை கண்காணித்து தடுக்க முடியும். மேலும், காடுகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் யானைகளை மீண்டும் காட்டிற்குள் விரட்டவும் முடியும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் முகமதுநசிமுதீன், முதன்மை தலைமை வன பாதுகாவலர் (துறைத்தலைவர்) பசவராஜூ மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் அகில உலக உயிர் பன்மை தினவிழா மே 22-ந்தேதி கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு விழா தாம்பரம் சேலையூர் அருகே உள்ள நன்மங்கலத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு மலைவாழ் மக்களுக்கு சிறுவன மகசூல் வருவாய் பயன் பங்கீட்டுத்தொகை ரூ.10 லட்சத்தை வழங்கினார். மேலும், 42 கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கடனுதவியும் வழங்கினார்.
இதனையடுத்து வனப்பகுதிகளை ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆள் இல்லா விமானம் மூலம் அடர்ந்த வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணி நடைபெற உள்ளது. ரூ.20 லட்சம் செலவில் ஓசூர், கோவை, நீலகிரி, கொடைக்கானல், மதுரை பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் கண்காணிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் சிறுத்தை மற்றும் புலிகள் காடுகளில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வருவதை கண்காணித்து தடுக்க முடியும். மேலும், காடுகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் யானைகளை மீண்டும் காட்டிற்குள் விரட்டவும் முடியும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் முகமதுநசிமுதீன், முதன்மை தலைமை வன பாதுகாவலர் (துறைத்தலைவர்) பசவராஜூ மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.