செய்திகள்
கிருஷ்ணபிரியா

பிளஸ்-2 தேர்வில் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை

Published On 2017-05-13 11:06 GMT   |   Update On 2017-05-13 11:06 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் கிருஷ்ணபிரியா(வயது 17). இவர் புத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.

தேர்வு எழுதிவிட்டு, முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. இதில் தமிழ் பாடத்தில் கிருஷ்ணபிரியா தோல்வி அடைந்திருந்தார்.

இதனால் மனமுடைந்த கிருஷ்ணபிரியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் கிருஷ்ணபிரியா உடல் கருகியது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை உறவினர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிருஷ்ணபிரியா இறந்து விட்டதாக கூறினர். அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

இது குறித்து புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News