செய்திகள்
பெண் மீது தாக்குதல்: 2 வீடுகளில் முகமூடி கொள்ளை
நெல்லிக்குப்பம் அருகே பெண்ணை தாக்கி 2 வீடுகளில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை முகமூடி கொள்ளையர்கள் திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள சித்தரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சந்தான லட்சுமி(வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராமச்சந்திரன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து சந்தானலட்சுமி தனது 2 மகன்களையும் சென்னையில் உள்ள ஒர்க்ஸ் ஷாப்புக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார்.
நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் சந்தானலட்சுமி கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று இரவு சந்தானலட்சுமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் முகமூடி அணிந்த 6 மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்ததை அறிந்ததும் சந்தானலட்சுமி திடுக்கிட்டு எழுந்தார், சத்தம் போட்டால் கத்தியால் குத்தி விடுவோம் என்று மர்ம மனிதர்கள் அவரை மிரட்டினர்.
சந்தானலட்சுமியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கசங்கிலியை பறித்தனர். பின்னர் பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்தார்.
இதனால் ஆத்திர மடைந்த அவர்கள் சந்தான லட்சுமியின் வயிற்றில் ஓங்கி மிதித்தனர்.
அங்கிருந்த பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் கோபத்தில் வீட்டிலிருந்து சந்தான லட்சுமியை அலாக்காக தூக்கி வீட்டின் அருகே உள்ள தோட்டத்துக்கு கொண்டு வந்தனர். அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்தனர்.
தடியால் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனே மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர் அதே பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பரின் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு வெளியே வந்தனர்.
அதே பகுதியில் இருந்த ராஜா, பெருமாள் ஆகியோரின் வீட்டுக்கதவை மர்ம மனிதர்கள் தட்டினர். அவர்கள் கதவை திறந்து கொண்டு வெளியே வரவில்லை. கொள்ளையர்கள் ஊருக்குள் புகுந்துள்ளது குறித்து அவர்கள் செல்போன் மூலம் அந்த பகுதியில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஊர்பொதுமக்கள் அந்த பகுதிக்கு திரண்டு வந்தனர். இதைப்பார்த்ததும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்றனர்.
ஆனால் அவர்கள் முள்புதருக்குள் புகுந்து தப்பிவிட்டனர். கொள்ளையர்கள் தாக்குதலில் மயங்கி கிடந்த சந்தானலட்சுமியை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு முரளீதரன், இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை குறித்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். 2 வீடுகளிலும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து புகார் செய்தவுடன் போலீசார் உடனடியாக வந்திருந்தால் கொள்ளையர்களை பிடித்திருக்கலாம் என்று பொதுமக்கள் கூறினர்.
முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கர் கூறும்போது, இந்த பகுதியில் இது போன்ற சம்பவம் இதற்கு முன் நடந்ததில்லை. கொள்ளையர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நகை மற்றும் பணத்தை போலீசார் மீட்டுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள சித்தரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சந்தான லட்சுமி(வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராமச்சந்திரன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து சந்தானலட்சுமி தனது 2 மகன்களையும் சென்னையில் உள்ள ஒர்க்ஸ் ஷாப்புக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார்.
நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் சந்தானலட்சுமி கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று இரவு சந்தானலட்சுமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் முகமூடி அணிந்த 6 மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்ததை அறிந்ததும் சந்தானலட்சுமி திடுக்கிட்டு எழுந்தார், சத்தம் போட்டால் கத்தியால் குத்தி விடுவோம் என்று மர்ம மனிதர்கள் அவரை மிரட்டினர்.
சந்தானலட்சுமியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கசங்கிலியை பறித்தனர். பின்னர் பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்தார்.
இதனால் ஆத்திர மடைந்த அவர்கள் சந்தான லட்சுமியின் வயிற்றில் ஓங்கி மிதித்தனர்.
அங்கிருந்த பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் கோபத்தில் வீட்டிலிருந்து சந்தான லட்சுமியை அலாக்காக தூக்கி வீட்டின் அருகே உள்ள தோட்டத்துக்கு கொண்டு வந்தனர். அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்தனர்.
தடியால் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனே மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர் அதே பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பரின் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு வெளியே வந்தனர்.
அதே பகுதியில் இருந்த ராஜா, பெருமாள் ஆகியோரின் வீட்டுக்கதவை மர்ம மனிதர்கள் தட்டினர். அவர்கள் கதவை திறந்து கொண்டு வெளியே வரவில்லை. கொள்ளையர்கள் ஊருக்குள் புகுந்துள்ளது குறித்து அவர்கள் செல்போன் மூலம் அந்த பகுதியில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஊர்பொதுமக்கள் அந்த பகுதிக்கு திரண்டு வந்தனர். இதைப்பார்த்ததும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்றனர்.
ஆனால் அவர்கள் முள்புதருக்குள் புகுந்து தப்பிவிட்டனர். கொள்ளையர்கள் தாக்குதலில் மயங்கி கிடந்த சந்தானலட்சுமியை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு முரளீதரன், இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை குறித்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். 2 வீடுகளிலும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து புகார் செய்தவுடன் போலீசார் உடனடியாக வந்திருந்தால் கொள்ளையர்களை பிடித்திருக்கலாம் என்று பொதுமக்கள் கூறினர்.
முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கர் கூறும்போது, இந்த பகுதியில் இது போன்ற சம்பவம் இதற்கு முன் நடந்ததில்லை. கொள்ளையர்களை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நகை மற்றும் பணத்தை போலீசார் மீட்டுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.