செய்திகள்
‘உங்களுடன் நான் நிகழ்ச்சி’: விஜயகாந்த் கலந்து கொண்ட கூட்டத்தில் தள்ளு-முள்ளு
பண்ருட்டி அருகே விஜயகாந்த் கலந்து கொண்ட உங்களுடன் நான் நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி:
தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொண்டர்களை சந்தித்து அவர்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாலை 4.55 மணி அளவில் விஜயகாந்த் காரில் அங்கு வந்தார். அவரை வரவேற்க மண்டபம் முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால் விஜயகாந்த் அங்குள்ள தனி வாசல் வழியாக மண்டபத்தின் உள்ளே சென்றார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள தே.மு.தி.க. தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு மேடை மீது ஏறினர்.
அவர்களை விஜயகாந்துடன் வந்திருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் தொண்டர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அப்போது காவலர்களை தள்ளிவிட்டு விஜயகாந்தை நோக்கி தொண்டர்கள் மேடைக்கு ஓடி வந்தனர்.
இதைப்பார்த்து கோபம் அடைந்த விஜயகாந்த் மேடையிலிருந்த தனி அறைக்கு சென்றுவிட்டார். மேடை மீது ஏறி நின்ற தொண்டர்களிடம் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறங்கி வரச் செய்தனர். சிறிது நேரம் கழித்து விஜயகாந்த் மீண்டும் மேடைக்கு வந்தார்.
பாதுகாப்புக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தொண்டர்கள் வரிசையாக ஒருவருக்குப் பின் ஒருவராக புகைப்படம் எடுத்துக்கொள்ள மேடைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் விஜயகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இரவு 8 மணிக்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொண்டர்களை சந்தித்து அவர்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாலை 4.55 மணி அளவில் விஜயகாந்த் காரில் அங்கு வந்தார். அவரை வரவேற்க மண்டபம் முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால் விஜயகாந்த் அங்குள்ள தனி வாசல் வழியாக மண்டபத்தின் உள்ளே சென்றார்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள தே.மு.தி.க. தொண்டர்கள் முண்டியடித்துக்கொண்டு மேடை மீது ஏறினர்.
அவர்களை விஜயகாந்துடன் வந்திருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் தொண்டர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அப்போது காவலர்களை தள்ளிவிட்டு விஜயகாந்தை நோக்கி தொண்டர்கள் மேடைக்கு ஓடி வந்தனர்.
இதைப்பார்த்து கோபம் அடைந்த விஜயகாந்த் மேடையிலிருந்த தனி அறைக்கு சென்றுவிட்டார். மேடை மீது ஏறி நின்ற தொண்டர்களிடம் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறங்கி வரச் செய்தனர். சிறிது நேரம் கழித்து விஜயகாந்த் மீண்டும் மேடைக்கு வந்தார்.
பாதுகாப்புக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தொண்டர்கள் வரிசையாக ஒருவருக்குப் பின் ஒருவராக புகைப்படம் எடுத்துக்கொள்ள மேடைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் விஜயகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இரவு 8 மணிக்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு விஜயகாந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.