செய்திகள் (Tamil News)
எடப்பாடி பழனிச்சாமியின் பதவி நாட்கள் எண்ணப்படுகிறது: ஜீவானந்தம்
வேதாரண்யத்தில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னால் அமைச்சர் ஜீவானந்தம், எடப்பாடி பழனிச்சாமியின் பதவி நாட்கள் எண்ணப்படுகிறது என கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தெற்கு வீதியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் தொகுதி செயலாளர் சண்முகராசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேதாரண்யம் நகராட்சி பகுதியை சேர்ந்த ஜானகிராமன், வீரமுத்து, குமார், வீரமணி, அசோக், பிரபாகரன், ராதா, வீரராசு, தகட்டூர் முன்னாள் ஊராட்சி தலைவர் அமிர்தகடேஸ்வரன், நத்தப்பள்ளம் நடராஜன், தீபா பேரவை வைரப்பிரகாஷ், தேத்தாகுடி அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் பேசும்போது, அ.தி.மு.க.விலிருந்து யாரையும் நீக்க யாருக்கும் தற்போது அதிகாரமில்லை. சட்டசபையில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் ஒருதலைபட்சமானது. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியின் பதவி நாட்கள் எண்ணப்படுகிறது. என்று கூறினார்.
முடிவில் தமிழ்மணி நன்றி கூறினார்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே மங்கைநல்லூரில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெ.தீபா ஆதரவு அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.நடராஜன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் கோமல் எஸ்.ஆர்.வினோத், தீபா பேரவை ஒன்றிய அமைப்பாளர் அய்யா.ராமகிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் ஆசைசங்கர், குத்தாலம் நகர அமைப்பாளர் வீரமணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேவதி, நகர துணை அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.என்.விஜயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, ஜெயலலிதாவின் பிறந்த நாளை கட்சி கொடியேற்றி, நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடுவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது, ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை கோருவது, சட்டபேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிப்பது, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு வரும்போது கருப்பு கொடி காட்டி கண்டனம் தெரிவிப்பது உள்பட 11 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எம்.கே.ரவி, பிரபாகரன், தர்மன், ஐடிஐ சம்பத், மணிகண்டன், அபுதாகிர், கண்ணையன், ராஜாராமன், பண்ணை நடராஜன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
வேதாரண்யம் தெற்கு வீதியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் தொகுதி செயலாளர் சண்முகராசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வேதாரண்யம் நகராட்சி பகுதியை சேர்ந்த ஜானகிராமன், வீரமுத்து, குமார், வீரமணி, அசோக், பிரபாகரன், ராதா, வீரராசு, தகட்டூர் முன்னாள் ஊராட்சி தலைவர் அமிர்தகடேஸ்வரன், நத்தப்பள்ளம் நடராஜன், தீபா பேரவை வைரப்பிரகாஷ், தேத்தாகுடி அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் பேசும்போது, அ.தி.மு.க.விலிருந்து யாரையும் நீக்க யாருக்கும் தற்போது அதிகாரமில்லை. சட்டசபையில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் ஒருதலைபட்சமானது. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியின் பதவி நாட்கள் எண்ணப்படுகிறது. என்று கூறினார்.
முடிவில் தமிழ்மணி நன்றி கூறினார்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே மங்கைநல்லூரில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெ.தீபா ஆதரவு அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.நடராஜன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் கோமல் எஸ்.ஆர்.வினோத், தீபா பேரவை ஒன்றிய அமைப்பாளர் அய்யா.ராமகிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் ஆசைசங்கர், குத்தாலம் நகர அமைப்பாளர் வீரமணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேவதி, நகர துணை அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.என்.விஜயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, ஜெயலலிதாவின் பிறந்த நாளை கட்சி கொடியேற்றி, நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடுவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது, ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை கோருவது, சட்டபேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிப்பது, சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு வரும்போது கருப்பு கொடி காட்டி கண்டனம் தெரிவிப்பது உள்பட 11 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எம்.கே.ரவி, பிரபாகரன், தர்மன், ஐடிஐ சம்பத், மணிகண்டன், அபுதாகிர், கண்ணையன், ராஜாராமன், பண்ணை நடராஜன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.