செய்திகள்

வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு

Published On 2016-12-17 09:47 GMT   |   Update On 2016-12-17 09:47 GMT
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் நளினி-முருகன் தம்பதி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து வருகின்றனர். அதன்படி இன்று காலை அவர்கள் சந்திப்பு நடந்தது.
வேலூர்:

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் நளினி-முருகன் தம்பதி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து வருகின்றனர்.

அதன்படி இன்று காலை 7.50 மணி முதல் 8.20 மணி வரை சந்திப்பு நடந்தது.

வேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆரோக்கியம் தலைமையிலான போலீசார் முருகனை பாதுகாப்புடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து வந்தனர். சந்திப்பு முடிந்ததும் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Similar News