செய்திகள்

2 நாட்களுக்குப்பிறகு தமிழகத்தில் கர்நாடக பஸ்கள் மீண்டும் இயக்கம்

Published On 2016-12-08 09:43 IST   |   Update On 2016-12-08 09:43:00 IST
2 நாட்களுக்குப்பிறகு தமிழகத்தில் கர்நாடக பஸ்கள் மீண்டும் இயக்கம் ஈரோடு-கோவை வந்தது ஈரோடு_01
ஈரோடு:

தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி நேற்றும், நேற்று முன்தினமும் கர்நாடக பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்படவில்லை.

இதனால் பெங்களூர், மைசூர் மற்றும் கொள்ளே காலிலிருந்து கோவை, சத்தியமங்கலம், ஈரோடு வரும் கர்நாடகா மாநில பஸ்கள் வரவில்லை.

ஒரு சில பஸ்கள் மட்டும் தமிழக எல்லையான தாளவாடி வரை வந்து விட்டு சென்றது. ஆனால் அந்த பஸ்களில் கூட்டம் இல்லை.

2 நாட்களுக்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) முதல் முழுமையாக கர்நாடக மாநில பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டன.

நேற்று மாலை முதல் ஒன்றிரண்டு பஸ்கள் இயங்கினாலும் இன்று காலை முதல் தான் முழுமையாக கர்நாடக மாநில பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டது. இன்று வந்த கர்டநாடக பஸ்களில் வழக்கம் போல் கூட்டம் காணப்பட்டது.

Similar News