செய்திகள்

வீடுகட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய மாநகராட்சி இளநிலை பொறியாளர் சஸ்பெண்டு

Published On 2016-12-04 10:17 GMT   |   Update On 2016-12-04 10:17 GMT
ஈரோடு அருகே வீடுகட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி இளநிலை பொறியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
ஈரோடு:

ஈரோடு கருங்கல் பாளையம், சின்னப்பகவுண்டர் வீதியை சேர்ந்தவர் நல்லசாமி(வயது 70). இவர் சொந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்தார்.

இதற்கான வரைபடத்திற்கு அனுமதி பெற ஈரோடு மாநகராட்சி நகரமைப்பு அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதற்கு லஞ்சமாக ரூ.40 ஆயிரம் வாங்கியதாக நகரமைப்பு இளநிலை பொறியாளர் பிரேம்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பிரேம்குமாரை கைது செய்தனர். இதையெடுத்து பிரேம்குமார் தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News