செய்திகள்
விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது எடுத்தபடம்.

டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: கடலூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

Published On 2016-11-29 10:05 GMT   |   Update On 2016-11-29 10:05 GMT
டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக கடலூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடலூர்:

கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா(வயது 27). இவர் கடந்த ஆண்டு திருச்செங்கோட்டில் துணைபோலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு உயர் அதிகாரிகளின் நெருக்கடியே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் தான் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் விஷ்ணுபிரியாவின் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடலூருக்கு இன்று வந்தனர்.

அவர்கள் கடலூர் கோண்டூர் பகுதியில் உள்ள விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

Similar News