செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,935 கனஅடியாக உயர்வு

Published On 2016-11-18 10:36 IST   |   Update On 2016-11-18 10:36:00 IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஆயிரத்து 935 கன அடியாக அதிகரித்து உள்ளது.
மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை ஆயிரத்து 241 கன அடியாக இருந்தது, இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்தது. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஆயிரத்து 935 கன அடியாக அதிகரித்து உள்ளது.

கர்நாடக அரசு அந்த மாநில விவசாயிகள் சாகுபடி செய்ய ஏதுவாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து உள்ளது. இதில் ஏற்படும் கசிவு நீர் மேட்டூர் அணைக்கும் வருவதால் நீர்வரத்து அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 41.19 அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Similar News