செய்திகள்

தேவகோட்டை அரசு பள்ளி அருகில் கேட்பாரற்று நிற்கும் மர்ம கார்

Published On 2016-11-11 15:41 IST   |   Update On 2016-11-11 15:41:00 IST
தேவகோட்டை அரசு பள்ளி அருகில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் மர்ம காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேவகோட்டை:

தேவகோட்டை ஒத்தக்கடை 6-வது வார்டு அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் சென்னை பதிவு எண் கொண்ட கருப்பு நிற கார் கடந்த 15 நாட்களுக்கு மேல் கேட்பார் இன்றி நிற்கிறது.

சில நாட்களாக தேவகோட்டை நகர் பகுதியில் பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. இந்த மர்ம கார் கருப்பு நிறமாக உள்ளதால் மற்ற ஊர்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு பயன்படுத்தி இங்கு நிறுத்தப்பட்டுள்ளதா? என அருகில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

பள்ளி அருகில் கார் நிற்பதால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அச்சத்துடனே வருகிறார்கள். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை மிகவும் அருகில் உள்ளதால் கடத்தலுக்கு பயன்படுத்தியதா? இல்லை மர்ம நபர்கள் வந்தார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News