செய்திகள்

மதுராந்தகம் பகுதியில் மர்ம காய்ச்சலால் 15 பேர் பாதிப்பு

Published On 2016-10-16 14:08 IST   |   Update On 2016-10-16 14:08:00 IST
மதுராந்தகம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மதுராந்தகம்:

மதுராந்தம் நகராட்சிக்குட்பட்ட மோச்சேரி பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சிறுவர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 15 பேர் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அப்பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்ததால் நோய் தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி தலைமையில் சுகாதாரப்பணிகள் நடந்து வருகிறது.

மருத்துவ குழுவினர் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

Similar News