செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: காதலன் தீக்குளித்து பலி

Published On 2016-09-20 12:40 IST   |   Update On 2016-09-20 12:40:00 IST
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காதலி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள காளி அபிராமி கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் சர்மா. இவரது மகன் கார்த்தி (22). டிப்ளமோ படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இவர் காளி அபிராமி கோவில் பகுதியை சேர்ந்த சின்னக்குஞ்சு மகள் வினோதினியை (20) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் கார்த்தி மனம் உடைந்து காணப்பட்டார். கடந்த 17-ந் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர் வந்தார். நேற்று அவர் தனது உடலில் மண் ணெணை ஊற்றி தீவைத்து கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இந்த தகவலை அறிந்ததும் காதலி வினோதினி அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மணல்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News