செய்திகள்

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் இன்று 105 ஜோடிகளுக்கு திருமணம்

Published On 2016-09-04 15:51 IST   |   Update On 2016-09-04 15:51:00 IST
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் இன்று 105 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. திருமண விழாவையொட்டி அதிகாலை முதலே கோவிலில் கூட்டம் அலைமோத தொடங்கியது.

நெல்லிக்குப்பம்:

கடலூர் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் சன்னதி உள்ளது. இங்கு முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணம் நடைபெறும்

ஹயக்ரீவர் ஜெயந்தி விழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி தேவநாத சாமி கோவிலில் 105 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

திருமண விழாவையொட்டி அதிகாலை முதலே கோவிலில் கூட்டம் அலைமோத தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்தது.

திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தம்பதிகளின் உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்ததால் திருவந்திபுரம்-பாலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுவை, கடலூர்- விழுப்புரம் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து இந்த கோவிலுக்கு திருமணம் செய்து கொள்ள பொதுமக்கள் அதிகம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News