படத்தின் நாயகன் அஜயும்- நாயகி தனுஷாவும் சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணத்திற்கு தயாராகும்போது இருவருக்கும் சண்டை வருகிறது.
இந்த சண்டை எல்லை மீறி போக ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள, அதை வீடியோ எடுத்து சிலர் நெட்டில் தட்டிவிட பிறகு என்ன இவர்கள் வைரக் ஆகின்றனர். இருவரும் பிரேக் அப் செய்து விடுகின்றனர்,
ஆனால், பிரேக் அப்பில் இருந்து அஜய், தனுஷா இருவருமே வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். இருவரும் தங்களின் நினைவுகளை மறக்க சாப்பாடு, பைக் ட்ரிப், ஷாப்பிங், ஆன்மிகம், ஜிம் என பல விஷயங்களில் கவனத்தை செலுத்துகின்றனர்,
இருவருக்கும் இன்னொரு காதலும் மலர்கிறது. ஆனால், பழைய காதலின் நினைவுகள் அவர்களை எதிலும் ஈடுப்படவிடாமல் தடுக்கிறது. ஒரு கட்டத்தில் இருவம் திருமணமே இதற்கு பதில் என வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர்.
இறுதியில், அஜயும்- தனுஷாவும் இணைந்தார்களா? அல்லது வேறு ஒருவரை திருமணம் செய்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
துறுதுறு இளைஞராக வரும் அஜய், முதுமுகமாக இருந்தாலும் நன்றாகவே நடித்திருக்கிறார். காதலிகளிடம் சிக்கித்தவிக்கும்போதும், முடிவெடுக்க முடியாமல் திணறும்போதும் அவரது இன்னொசன்ஸ் நடிப்பு வெளிப்படுகிறது. ஹீரோயினாக நடித்து இருக்கும் தனுஷா கதைக்கு பலம். அழகு.
ஷியாரா காதல் சீன்களில் விறுவிறுப்பாக நடித்துள்ளார்.
இயக்கம்
இன்றைய இளம் தலைமுறையினர் மனநிலை, அவர்கள் காதலையும், வாழ்க்கையையும் பார்க்கும் விதத்தை படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரா.
கதையும், படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகளிலும் புதிதாக ஒன்றுமில்லை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
விஜய் ஆண்டனியின் இசை படத்திற்கு பலம் சேர்க்கவில்லை.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளரான கணேஷ் சந்திரா, இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
ரேட்டிங்: 1.5/5