செய்திகள்
ஈரோட்டில் வேலைதேடி வந்த 3 பெண்களை விபசாரத்தில் தள்ளிய வாலிபர்கள் - போலீசார் மீட்டனர்
ஈரோடு மாவட்டத்தில் வேலைதேடி வந்த 3 பெண்களை விபசாரத்தில் தள்ளிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வீட்டில் இருந்த 3 இளம் பெண்களையும் மீட்டனர்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் சங்ககிரி மூலக்காடு மோரூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் சதீஸ் குமார் (வயது 34). இவர் தனது நண்பரை பார்க்க ஈரோடு அடுத்த சித்தோடுக்கு வந்தார்.
கனிராவுத்தர் குளம் அருகே அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி நின்று கொண்டிருந்தபோது ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த சிவகுமார், கணேசன் என்ற 2 பேர் விலாசம் கேட்பது போல் சதீஸ்குமாரிடம் பேச்சு கொடுத்தனர்.
பிறகு அவர்கள் சதீஸ் குமாரிடம் ‘‘எங்களிடம் பெண்கள் உள்ளனர். ரூ.1000 கொடுத்தால் எந்த பெண்ணிடமும் உல்லாசமாக இருக்கலாம்’’ என்று ஆசை வார்த்தை அள்ளி வீசினர். பிறகு அவரை 2 பேரும் அழைத்து ஒரு வீட்டுக்கு சென்றனர்.
அந்த வீட்டில் 3 பெண்கள் இருந்தனர். அந்த பெண்களிடம் சதீஸ்குமார் விசாரித்த போது, ‘‘வேலை தேடி வந்த எங்களை கணேசனும், சிவகுமாரும் அழைத்து வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்தனர். பிறகு வேலைக்கு போனால் அதிக பணம் கிடைக்காது. விபாசாரத்தில் தான் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி இங்கு வைத்துள்ளனர். எங்களை காப்பாற்றுங்கள்’’ என்று கூறினார்களாம்.
பிறகு தன்னை அழைத்து வந்த 2 வாலிபர்களிடம் சதீஸ்குமார் தன்னிடம் பணம் கொஞ்சம் குறைவாக உள்ளது. பக்கத்தில் உள்ள ஏ.டி.எம். சென்டரில் பணம் எடுத்து கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
பிறகு அவர் ஈரோடு வடக்கு போலீசில் இது பற்றி புகார் செய்தார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த 3 இளம் பெண்களையும் மீட்டனர். வீட்டில் இருந்த கணேசன் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் சங்ககிரி மூலக்காடு மோரூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் சதீஸ் குமார் (வயது 34). இவர் தனது நண்பரை பார்க்க ஈரோடு அடுத்த சித்தோடுக்கு வந்தார்.
கனிராவுத்தர் குளம் அருகே அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி நின்று கொண்டிருந்தபோது ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த சிவகுமார், கணேசன் என்ற 2 பேர் விலாசம் கேட்பது போல் சதீஸ்குமாரிடம் பேச்சு கொடுத்தனர்.
பிறகு அவர்கள் சதீஸ் குமாரிடம் ‘‘எங்களிடம் பெண்கள் உள்ளனர். ரூ.1000 கொடுத்தால் எந்த பெண்ணிடமும் உல்லாசமாக இருக்கலாம்’’ என்று ஆசை வார்த்தை அள்ளி வீசினர். பிறகு அவரை 2 பேரும் அழைத்து ஒரு வீட்டுக்கு சென்றனர்.
அந்த வீட்டில் 3 பெண்கள் இருந்தனர். அந்த பெண்களிடம் சதீஸ்குமார் விசாரித்த போது, ‘‘வேலை தேடி வந்த எங்களை கணேசனும், சிவகுமாரும் அழைத்து வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்தனர். பிறகு வேலைக்கு போனால் அதிக பணம் கிடைக்காது. விபாசாரத்தில் தான் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி இங்கு வைத்துள்ளனர். எங்களை காப்பாற்றுங்கள்’’ என்று கூறினார்களாம்.
பிறகு தன்னை அழைத்து வந்த 2 வாலிபர்களிடம் சதீஸ்குமார் தன்னிடம் பணம் கொஞ்சம் குறைவாக உள்ளது. பக்கத்தில் உள்ள ஏ.டி.எம். சென்டரில் பணம் எடுத்து கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
பிறகு அவர் ஈரோடு வடக்கு போலீசில் இது பற்றி புகார் செய்தார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த 3 இளம் பெண்களையும் மீட்டனர். வீட்டில் இருந்த கணேசன் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.