செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 47 பள்ளி வாகனங்கள் ஆய்வு

Published On 2016-05-21 14:17 IST   |   Update On 2016-05-21 14:17:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 47 பள்ளிக்கூடங்களின் வாகனங்கள் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
திருவான்மியூர்:

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.

இதையொட்டி பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 47 பள்ளிக்கூடங்களின் வாகனங்கள் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 160 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விட்டன. இன்று மேலும் 160 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 354 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்.டி.ஓ.) பாஸ்கர் தெரிவித்தார்.

பள்ளிக்கூட வாகனங்களில் சாய்வுதள படிக்கட்டு, அவசர வழி, தீயணைப்பு கருவிகள், முதல் உதவி பெட்டி, மருந்துகள், இருக்கைகளின் வசதிகள், இருக்கைகளின் கீழ் உள்ள தரைதளம், பிரேக், வேக கட்டுப்பாட்டு கருவி ஆகியவை முறையாக பராமரிக்கப்பட்டு உள்ளனவா? என்று அவர்கள் சோதனை செய்தனர்.

இந்த ஆய்வில் ஆர்.டி.ஓ. பாஸ்கர் தலைமையில் மோட்டார் வாகன சூப்பிரண்டு துரை, அமிதாபானு மற்றும் வருவாய் அதிகாரிகள், போக்குவரத்து பிரிவு போலீசார் ஈடுபட்டனர்.

Similar News