செய்திகள்

திருநங்கைகள் குறித்து அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு மீதான வழக்கு விசாரணை 6–ந்தேதிக்கு தள்ளிவைப்பு

Published On 2016-04-25 16:30 IST   |   Update On 2016-04-25 16:29:00 IST
திருநங்கைகள் பற்றி அவதூறாக பேசியதாக குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை 6–ந் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை:

மதுரையை சேர்ந்த திருநங்கையான பாரதி கண்ணம்மா கடந்த 13–ந் தேதி மதுரை மாவட்ட ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்.4 கோர்ட்டில் ஒரு மனு தாக்கல செய்திருந்தார். அதில், காங்கிரஸ் பிரமுகரும், நடிகையுமான குஷ்பு, திருநங்கைகள் பற்றி தரக்குறைவாக பேசி உள்ளார். இதனால் அவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு திரிவேணி, விசாரணையை அடுத்த மாதம் (மே) 6–ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Similar News