தமிழ்நாடு செய்திகள்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகம்-காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை

Published On 2022-09-20 14:21 IST   |   Update On 2022-09-20 14:21:00 IST
  • கடந்த 7-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
  • மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, படகு உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.

ராமேசுவரம்:

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அந்த 12 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுக்கான நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து 12 மீனவர்களும் இலங்கை திரிகோண மலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, படகு உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News