தமிழ்நாடு

கோயம்பேட்டில் மல்லி பூ 1 கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை

Published On 2022-12-04 09:56 GMT   |   Update On 2022-12-04 09:56 GMT
  • கடந்த சில நாட்களாகவே மல்லி, கனகாம்பரம், ஜாதி உள்ளிட்ட பூக்களின் விலை திடீரென அதிகரித்தது.
  • கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்ற மல்லி இன்று மேலும் அதிகரித்து கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

போரூர்:

சென்னை கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், சேலம், திண்டுக்கல், சத்தியமங்கலம், ஓசூர் ஆகிய பகுதிகள் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பூ தினசரி விற்பனைக்கு வருகிறது.

மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் முகூர்த்த நாட்கள் அடுத்த டுத்து வருவதால் பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே மல்லி, கனகாம்பரம், ஜாதி உள்ளிட்ட பூக்களின் விலை திடீரென அதிகரித்தது.

இந்த நிலையில் இன்று சுப முகூர்த்த நாள், நாளை மறுநாள் கார்த்திகை தீபம் என அடுத்தடுத்து விசேஷ நாட்கள் என்பதால் பூக்கள் விலை மேலும் அதிகரித்து உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்ற மல்லி இன்று மேலும் அதிகரித்து கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ ரூ.800-க்கு விற்ற ஐஸ் மல்லி இன்று ரூ.1500 வரை விற்கப்படுகிறது.

இன்றைய பூக்கள் விலை விவரம் வருமாறு (கிலோவில்):- சாமந்தி (ரகத்தை பொறுத்து)-ரூ.50 முதல் ரூ.80 வரை, அரளி-ரூ.250, பன்னீர் ரோஸ்-ரூ.100 முதல் ரூ.120 வரை, சாக்லேட் ரோஸ்-ரூ.140 முதல் ரூ.160 வரை, மல்லி-ரூ.2000, ஐஸ் மல்லி-ரூ.1200 முதல் ரூ.1500 வரை, முல்லை-ரூ.1000, கனகாம்பரம் (ரகத்தை பொறுத்து)-ரூ.600 முதல் ரூ.800 வரை, ஜாதி-ரூ.500 முதல் ரூ.600 வரை.

Tags:    

Similar News