விளையாட்டு

மகளிர் ஸ்டீப்பிள் சேஸ்- தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை பாரு சவுத்ரி

Published On 2023-08-28 00:01 GMT   |   Update On 2023-08-28 00:01 GMT
  • மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 11வது இடம் பிடித்தார்.
  • 9.23 நிமிடங்களில் இலக்கை கடந்ததால் அடுத்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடுாபெஸ்டில் 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 11வது இடம் பிடித்தார்.

பந்தய தூரத்தை 9.15.31 நிமிடங்களில் கடந்து புதிய தேசிய சாதனையை படைத்தார் பாருல் சவுத்ரி.

9.23 நிமிடங்களில் இலக்கை கடந்ததால் அடுத்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

Tags:    

Similar News