விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை அரையிறுதியில் தோல்வி

Published On 2024-02-04 04:42 GMT   |   Update On 2024-02-04 04:42 GMT
  • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடந்தது.
  • இதில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

பாங்காக்:

தாய்லாந்து மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்து வீராங்கனை சுபநிடா கேட்தாங்குடன் மோதினார்.

இதில் அஷ்மிதா சாலிஹா 13-21, 12-21 என்ற செட் கணக்கில் சுபநிடா கேட்தாங்கிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

Tags:    

Similar News