டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ரிபாகினா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2025-05-10 03:50 IST   |   Update On 2025-05-10 03:50:00 IST
  • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
  • 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா ஒசாகா வெற்றி பெற்றார்.

ரோம்:

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் பொடபோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News