டென்னிஸ்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் டிமித்ரோவ்

Published On 2025-01-04 01:58 IST   |   Update On 2025-01-04 01:58:00 IST
  • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
  • இதில் நம்பர் 2 வீரரான டிமித்ரோவ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

சிட்னி:

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் உடன் மோதினார்.

இதில் டிமித்ரோவ் முதல் செட்டை 6-1 என வென்றார். 2வது செட்டில் 2-1 என முன்னிலை வகித்தபோது தாம்சன் திடீரென விலகினார்.

இதையடுத்து, டிமித்ரோவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் டிமித்ரோவ், செக் வீரரான ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.

Tags:    

Similar News