டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ரைபகினா - விக்டோரியா எம்போகோ

Published On 2025-08-05 10:41 IST   |   Update On 2025-08-05 10:41:00 IST
  • காலிறுதி ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனையை ரைபகினா வீழ்த்தினார்.
  • அரையிறுதியில் விக்டோரியா எம்போகோ - ரைபகினா மோத உள்ளனர்.

டொராண்டோ:

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரைபகினா (கஜகஸ்தான்) - மார்டா கோஸ்ட்யுக் (உக்ரைன்) மோதினர்.

இதில் முதல் செட்டை ரைபகினா எளிதில் கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 2-வது செட்டில் கோஸ்ட்யுக் காயமடைந்தார். இதனால் அவரால் மேற்கொண்டு விளையாட முடியவில்லை.

போட்டியை மேற்கொண்டு தொடர முடியாத சூழலில் ரைபகினா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் விக்டோரியா எம்போகோ (கனடா)- ஜெசிகா பௌசாஸ் மனிரோ (ஸ்பானிஷ்) ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் விக்டோரியா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

அரையிறுதியில் விக்டோரியா எம்போகோ - ரைபகினா மோத உள்ளனர். 

Tags:    

Similar News