விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முன்னேறியது சாத்விக் சிராக் ஜோடி

Published On 2025-08-29 00:10 IST   |   Update On 2025-08-29 00:10:00 IST
  • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
  • இந்தியாவின் சாதவிக் சிராக் ஜோடி 2வது சுற்றிலும் வெற்றி பெற்றது.

பாரிஸ்:

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி, சீனாவின் லியனக் வெய் காங்-வாங் சாங் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 19-21 என முதல் செட்டை இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட சாத்விக் சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-17 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

Tags:    

Similar News