விளையாட்டு

சென்னையில் புரோ கபடி லீக்: புனே அணிக்கு பெங்கால் பதிலடி கொடுக்குமா? இன்று இரவு மோதல்

Published On 2025-09-30 11:34 IST   |   Update On 2025-09-30 11:34:00 IST
  • புரோ கபடி லீக்கின் 3-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
  • புனே அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

சென்னை:

12 அணிகள் பங்கேற்று உள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டியின் முதல் 2 கட்ட ஆட்டங்கள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூரில் நடைபெற்றது. 3-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்ஸ் 33-27 என்ற கணக்கில் உ.பி. யோதாசை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. உ.பி. அணி 5-வது தோல்வியை தழுவியது.

அதைத் தொடர்ந்து தபாங் டெல்லி- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இதில் டெல்லி 38-37 என்ற கணக்கில் அரியானாவை தோற்கடித்து 8-வது வெற்றியை பெற்றது. அரியானாவுக்கு 3-வது தோல்வி ஏற்பட்டது.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-பாட்னா பைரேட்ஸ் மோதுகின்றன.

தெலுங்கு டைட்டன்ஸ் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. 6-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. பாட்னா 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் புனேரி பால்டன்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

புனே அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. பெங்காலை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. புனே அணி கடந்த 3-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 45-36 என்ற கணக்கில் பெங்காலை வீழ்த்தி இருந்தது.

பெங்கால் 4-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. புனேக்கு பதிலடி கொடுத்து 5-வது வெற்றி பெறும் வேட்கையில் உள்ளது.

Tags:    

Similar News