விளையாட்டு
null

உலக தடகள சாம்பியன்ஷிப்- நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதி

Published On 2023-08-25 09:44 GMT   |   Update On 2023-08-25 09:51 GMT
  • அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு நீரஜ் சோப்ரா நேரடியாக தகுதி பெற்றார்.
  • இந்த ஆண்டு 90 மீட்டர் ஓட்டத்தை எவரும் தாண்டவில்லை.

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இன்று ஆடவர் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 83.00 மீட்டர் வீச வேண்டும்.

ஆனால் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே 88.77மீ. தூரத்தை எட்டி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதன் மூலம் அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.


Tags:    

Similar News