விளையாட்டு

அல்-நாசர் அணி உடனான ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தார் ரொனால்டோ

Published On 2025-06-26 20:53 IST   |   Update On 2025-06-26 20:53:00 IST
  • 2022ஆம் ஆண்டு இறுதியில் அல்-நாசர் அணியுடன் ஒப்பந்தம் செய்தார்.
  • தற்போது ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளார்.

உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.

இது தொடர்பாக ரொனால்டோ தனது சமூக வலைத்தளத்தில் "புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதே பேரார்வம், அதே கனவு. இணைந்து சதனைப் படைப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஐந்து முறை பலோன் டிஆர் விருது வென்ற ரொனால்டோ, கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் அல்-நாசர் அணிக்கு சென்றார். இவருக்கு வருடத்திற்கு 20 கோடி அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News