null
டி.என்.பி.எல். ஏலம்: விஜய் சங்கரை ரூ. 18 லட்சத்திற்கு எடுத்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
- ரோகித் சுதரை ரூ. 7.95 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.
- மோகித் ஹரிகரனை ரூ. 5.2 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18 லட்சம் ரூபாய்க்கு இந்திய அணி வீரரான விஜய் சங்கரை ஏலம் எடுத்தது.
ஸ்வப்னில் கே. சிங்கை ரூ. 10.8 லட்சத்திற்கு எடுத்தது. தினேஷ் ராஜை ரூ. 50 ஆயிரத்திற்கும், மோகித் ஹரிகரனை ரூ. 5.2 லட்சத்திற்கும், கிருபாகரனை ரூ. 50 ஆயிரத்திற்கும், அக்ரம் கானை ரூ. 1.10 லட்சத்திற்கும், ரோகித் சுதரை ரூ. 7.95 லட்சத்திற்கும், ராஜலிங்கத்தை ரூ. 50 ஆயிரத்திற்கும், பிரேம் குமாரை ரூ. 60 ஆயிரத்திற்கும், ஆசிக் ஸ்ரீனிவாசை ரூ. 50 ஆயிரத்திற்கும் ஏலம் எடுத்துள்ளது.
திண்டுக்கல் டிராகன்ஸ் பெரியசாமியை ரூ. 9.8 லட்சத்திற்கும், மான் கே. பஃவ்னாவை ரூ. 5.7 லட்சத்திற்கும், ஆர்.கே. ஜெயந்த்தை ரூ. 1.15 லட்சத்திற்கும், விமல் குமாரை ரூ. 3.80 லட்சத்திற்கும், ராஜ்விந்தர் சிங்கை ரூ. 50 ஆயிரத்திற்கும், சந்திரசேகரை ரூ. 85 ஆயிரத்திற்கும், ஹன்னி சைனியை ரூ. 11.70 லட்சத்திற்கும், கார்த்திக் சரணை ரூ. 50 ஆயிரத்திற்கும், விஜு அருளை ரூ. 50 ஆயிரத்திற்கும் ஏலம் எடுத்துள்ளது.