கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் 2025: நெல்லை அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கோவை கிங்ஸ்

Published On 2025-06-21 21:09 IST   |   Update On 2025-06-21 21:09:00 IST
  • லோகேஷ்வர் 90 ரன்கள் விளாசினார்.
  • சோனு யாதவ், ராதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 18ஆவது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கோவை முதலில் பேட்டிங் செய்தது. ஜிதேந்திர குமார், சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜிதேந்தர் குமார் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சச்சின் 10 ரன்னிலும், சித்தார்த் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபக்கம் லோகேஷ்வர் நிலைத்து நின்று ஆட, 4ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கேப்டன் ஷாருக்கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 15 ஓவரில் கோவை 105 ரன்கள் எடுத்திருந்தது.

16 ஓவரில் 22 ரன்கள் அடித்த கோவை, சோனு யாதவ் வீசிய 17ஆவது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது. லோகேஷ்வர் மட்டும் அரைசதம் அடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

கோவைக்கு18ஆவது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. 19ஆவது ஓவரில் 7 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் 19 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரில் 20 ரன்கள் அடிக்க கோவை 165 ரன்கள் குவித்தது. லோகேஷ்வர் 90 ரன்கள் விளாசினர்.

Tags:    

Similar News