கிரிக்கெட் (Cricket)

சுப்மன் கில்லுக்கு சிறப்பு பரிசு வழங்கிய சுனில் கவாஸ்கர்: காரணம் இதுதான்

Published On 2025-08-03 23:45 IST   |   Update On 2025-08-03 23:45:00 IST
  • இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 754 ரன்கள் குவித்தார்.
  • 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

லண்டன்:

இங்கிலாந்த், இந்தியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்னும், இங்கிலாந்து அணி 247 ரன்னும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 396 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இதன்மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 35 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் நாளை 5-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

நடப்பு தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மொத்தம் 754 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுனில் கவாஸ்கரிடம் இருந்து தட்டிப்பறித்தார்.

இந்நிலையில், சுப்மன் கில்லுக்கு சுனில் கவாஸ்கர் 2 சிறப்பு பரிசுகளை வழங்கினார். தனது கையொப்பமிட்ட ஒரு சிறிய சிவப்பு தொப்பி மற்றும் சட்டை ஒன்றை பரிசாக வழங்கினார்.

இதுதொடர்பாக கவாஸ்கர் கூறுகையில், சிறப்பு. என்னுடைய இன்னொரு சாதனையையும் முறியடிப்பீர்கள் என எதிர்பார்த்தேன். இது என்னிடமிருந்து உங்களுக்கு சிறிய பரிசு. ஒரு சட்டை மற்றும் என்னுடைய கையொப்பமிட்ட தொப்பி. இந்தத் தொப்பியை சிலருக்கு மட்டுமே கொடுப்பேன். வாழ்த்துகள், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். 2021 ஆஸ்திரேலியா காபா டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற நாளன்று அணிந்திருந்த அதிர்ஷ்டமான சட்டையை மீண்டும் இப்போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் அணிந்து வருவேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News