ஆசிய கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது இலங்கை
- முதலில் ஆடிய வங்கதேசம் 139 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை, வங்கதேசம் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஜேகர் அலி 41ரன்னும், ஷமிம் ஹொசைன் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை அணி அணி ஹசரங்கா 2 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார்.
கமில் மிஷாரா 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.