கிரிக்கெட் (Cricket)

5 நாள் சும்மா இருப்பதைவிட., இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் நிதிஷ் ரெட்டி

Published On 2025-11-12 21:16 IST   |   Update On 2025-11-12 21:16:00 IST
  • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் துருவ் ஜுரல் பேட்ஸ்மேனாக களம் இறங்குகிறார்.
  • நிதிஷ் ரெட்டி ஆடும் லெவனில் இடம் பெற முடியாததால், 50 ஓவர் போட்டியில் விளையாட அணி விரும்புகிறது.

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளைமுறுதினம் (14-ந்தேதி) தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் நிதிஷ் ரெட்டி இடம் பிடித்திருந்தார். காயத்தில் இருந்து மீண்ட ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் ஜுரலை அணி நிர்வாகம் பேட்ஸ்மேனாக ஆடும் லெவனில் களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதனால் நிதிஷ் ரெட்டிக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை. இதனால் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா ஏ- தென்ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ராஜகோட்டில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், இந்தியா ஏ அணியில் இணைய உள்ளார்.

Tags:    

Similar News